தமிழ் சமையல்ருசி

நீங்களும் எளிதாக சமைக்கலாம்!. உங்கள் குறிப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்

பீஸ் மசாலா

தேவையானவை:

பட்டாணி & 1 கப், பெரிய வெங்காயம் & 3, தக்காளி & 3, புளிக்காத தயிர் & கால் கப், இஞ்சி, பூண்டு விழுது & 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் & 2 டீஸ்பூன், தனியா தூள் & 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் & அரை டீஸ்பூன், வெண்ணெய் & 50 கிராம், உப்பு & தேவைக்கு, எண்ணெய் & 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை & சிறிதளவு.

செய்முறை:

பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்கி, ஆறவைத்து அரைத்தெடுங்கள்.
இப்போது, வெண்ணெயை உருக்கி, அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன், உப்பும் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு, தயிர், தேவையான தண்ணீர், வேகவைத்த பட்டாணியை சேர்த்து, கரம் மசாலாவைத் தூவி, 2 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.

-நன்றி விகடன்

0 மறுமொழிகள்:

Post a Comment

<<