தமிழ் சமையல்ருசி

நீங்களும் எளிதாக சமைக்கலாம்!. உங்கள் குறிப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்

கோபி மசாலா

தேவையானவை:
காலிஃப்ளவர் - சிறிய பூவாக 1, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

தாளிக்க: பட்டை - 1, சீரகம் - அரை டீஸ்பூன்.

அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல், மிளகாய்த் தூள், கசகசா - தலா 2 டீஸ்பூன், தனியா தூள், மிளகு - தலா 1 டீஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 8.


செய்முறை:


காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேருங்கள். அதில், பத்து நிமிடங்கள் காலிஃப்ளவரை போட்டு, வெளியில் எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கி, நிறம் மாறியதும், தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைப் போட்டு, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

கலக்கல் கோபி மசாலா நிமிஷத்தில் தயார்!

- நன்றி: விகடன்

0 மறுமொழிகள்:

Post a Comment

<<